இம்மாதம் 16இல் நடைபெற இருந்த திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 16) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அக்கூட்டம் நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக அந்தக் கூட்டம் இம்மாதம் 22ஆம் தேதி ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடைபெறும் என்றார் அவர்.