கீழப்பாவூர் விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நாளை தொடக்கம்

கீழப்பாவூர் 2ஆம் தெருவில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா சனிக்கிழமை (ஆக.24) தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. 

கீழப்பாவூர் 2ஆம் தெருவில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா சனிக்கிழமை (ஆக.24) தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. 
தினந்தோறும்  காலை கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலையில் சாயரட்சை, தீபாராதனை ஆகியவை நடைபெறும். இரவு 7 மணிக்கு சுவாமிக்கு மாவு, மஞ்சள், விபூதி, சந்தனம், வெண்ணெய், மலர், பழங்கள், காய்கனி போன்ற பொருள்களால் தினந்தோறும் வெவ்வேறு அலங்காரம், 1008 அர்ச்சனை, தீபாராதனை நடைபெறுகிறது.
விநாயகர் சதுர்த்தி தினமான செப்.2 ஆம் தேதி காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், கும்ப ஜெபம், விசேஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். இரவு விநாயகருக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com