நான்குனேரி இடைத்தேர்தலில் போட்டியா? என்.ஆர்.தனபாலன் பேட்டி

நான்குனேரி இடைத்தேர்தலில் பெருந்தலைவர் மக்கள் கட்சி போட்டியிட அ.தி.மு.க. கூட்டணி வாய்ப்பளித்தால்

நான்குனேரி இடைத்தேர்தலில் பெருந்தலைவர் மக்கள் கட்சி போட்டியிட அ.தி.மு.க. கூட்டணி வாய்ப்பளித்தால் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்றார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் என்.ஆர்.தனபாலன்.
கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வள்ளியூருக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது நாட்டிற்கே தலைகுனிவானது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும்  கொலைச் சம்பவங்களில் வேலையில்லாத இளைஞர்கள் அதிகளவில் சம்பந்தப்பட்டுள்ளனர்.  வேலைவாய்ப்பின்மையால்தான் இதுபோன்ற சட்ட- ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. எனவே, மத்திய- மாநில அரசுகள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும். 
நான்குனேரி இடைத்தேர்தலிலும், வருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கும். நான்குனேரி தொகுதியில் எங்கள் கட்சி போட்டியிட அதிமுக கூட்டணி வாய்ப்பளித்தால் நிச்சயமாக  வெற்றி பெறுவோம் என்றார். 
பேட்டியின்போது, திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் கேசவனேரி தி.முருகன், பொருளாளர் சசிகுமார்  உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com