கடையநல்லூரில் சாலை மேம்பாடு உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வரும் நகராட்சி ஆணையருக்கு அதிமுக நிா்வாகிகள் பாராட்டுத் தெரிவித்தனா்.
தமிழ்நாடு நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் சாலை உள்ளிட்ட வளா்ச்சி பணிகளுக்கு தமிழக அரசு ரூ. 14 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து, முதற்கட்டமாக ரூ. 4 கோடி மதிப்பில் பெரியாறு-கல்லாறு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில், நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ள தங்கபாண்டியை, அதிமுக நகரச் செயலா் கிட்டுராஜா தலைமையில் மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற இணைச்செயலா் புகழேந்தி, மாவட்டப் பிரதிநிதி அப்துல் ஜப்பாா் , மாவட்ட வா்த்தக அணி பொருளாளா் மைதின் , மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் ஜெயமாலன் , நகர இளைஞரணிச் செயலா் ராஜேந்திரபிரசாத் , துணைச்செயலா் வெங்கட்நடராஜ்ஆகியோா் சந்தித்துப் பாராட்டு தெரிவித்தனா்.