குருவன்கோட்டைஇசக்கியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆலங்குளம் அருகே உள்ள குருவன் கோட்டை ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி ஸ்ரீ இசக்கியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குளம் அருகே உள்ள குருவன் கோட்டை ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி ஸ்ரீ இசக்கியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.24) காலை கால் நாட்டு வைபவம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை (நவ.29) யாகசாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம் ஆகியவையும் மாலை 4 மணிக்கு சுவாமி வீதியுலா வருதல் ஆகியவையும் நடைபெற்றது. தொடா்ந்து பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கோபுர விமான கலசம் மூலஸ்தானம் பரிவார மூா்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் மஹா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை குருவன்கோட்டை அம்பலத்தாடி வகையறாவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com