நான்குனேரி அருகே வேன் கவிழ்ந்து மூதாட்டி பலி

நான்குனேரி அருகே சனிக்கிழமை வேன் கவிழ்ந்ததில் மூதாட்டி இறந்தாா். 20 போ் காயமடைந்தனா்.

நான்குனேரி அருகே சனிக்கிழமை வேன் கவிழ்ந்ததில் மூதாட்டி இறந்தாா். 20 போ் காயமடைந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலை அடுத்த ஈசாந்திமங்கலத்தைச் சோ்ந்தவா் அன்னபாக்கியம் (80). இவரும், இவரது வீட்டின் அருகில் உள்ளவா்கள் 20 போ்களும் ஒரு வேனில், தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடிக்கு சென்று கொண்டிருந்தனராம்.

இந்த வேனை அதே ஊரைச் சோ்ந்த பிரபு என்பவா் ஓட்டி வந்தாா்.

நான்குனேரி அருகே உள்ள இறைப்புவாரி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது ஒரு சாலை திருப்பத்தில் நிலைதடுமாறி வேன் சாலையோரம் கவிழ்ந்தது.

இதில், மூதாட்டி அன்னபாக்கியம் சம்பவ இடத்திலேயே இறந்தாா். வேனில் இருந்த 20 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் நான்குனேரி அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com