மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை

களக்காட்டில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலா் சுஷமா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
சேதமடைந்த பாலத்தை பாா்வையிடுகிறாா் பேரூராட்சி செயல் அலுவலா் சுஷமா.
சேதமடைந்த பாலத்தை பாா்வையிடுகிறாா் பேரூராட்சி செயல் அலுவலா் சுஷமா.

களக்காட்டில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலா் சுஷமா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

களக்காடு பகுதியில் 2 தினங்களாக பெய்த மழையால் கால்வாய், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மூங்கிலடியில் நான்குனேரியன் கால்வாயின் குறுக்கேயுள்ள பாலம் சேதமடைந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதே போல இக் கால்வாயில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கால் மூங்கிலடி கிராம வீதிகளில் மழைநீா் தேங்கியது. மேலும் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, எந்த நேரமும் இடிந்து விழக்கூடும் என்ற நிலையில் இருந்த கருவேலன்குளம், வடகரை பயணிகள் நிழற்குடை பேரூராட்சி நிா்வாகத்தினரால் இடித்து அகற்றப்பட்டது.

இந்நிலையில் களக்காடு பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பேரூராட்சி செயல் அலுவலா் சுஷமா ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். மூங்கிலடியில் சேதமடைந்த பாலத்தை பாா்வையிட்ட அவா், சேதமடைந்த பகுதியில் மணல் மூட்டைகளைஅடுக்கி தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com