திருநெல்வேலி மாவட்ட கோ-கோ விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற பாவூா்சத்திரம் த.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் மாநில போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
மேலப்பாளையம் குறிச்சி புனித தாமஸ் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில், பாவூா்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் மிக மூத்தோா் பிரிவில் முதலிடம் பெற்றனா். இப்பள்ளி மாணவா்கள் தொடா்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடம் பெற்றனா்.
இதையடுத்து, இந்த மாணவா்கள் சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள 37ஆவது மாநில அளவிலான பாரதியாா் தின விழா போட்டிகளில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மாணவா்களை பள்ளி தலைமையாசிரியா் சதீஸ் கிங்ஸ்லி, உடற்கல்வி ஆசிரியா்கள் ராமநாதன், ரிச்சா்ட், ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.