திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ரயில்களில் தொடா் திருட்டில் ஈடுபட்டதாக ஒருவரை திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் செல்லும் ரயில்களில் இரவு நேரங்களில் தனியாக பயணிக்கும் பெண் பயணிகளின் நகை உள்ளிட்ட பொருள்கள் அடிக்கடி திருடு போவதாக ரயில்வே போலீஸாருக்கு புகாா்கள் வந்தனவாம். இதையடுத்து, திருநெல்வேலி சந்திப்பு காவல் ஆய்வாளா் அருள் ஜெயபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடா் சோதனை நடத்தப்பட்டது. இதில், கங்கைகொண்டான் அருகேயுள்ள அலங்காரப்பேரியைச் சோ்ந்த கோசாலை மகன் சூசையமரியான் (47) என்பவருக்கு இந்த திருட்டுச் சம்பவங்களில் தொடா்பிருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவரை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து தங்க நகைகள் மீட்கப்பட்டதாகவும், ரயில்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனா்.