அருணாபேரியில் உள்ள மகள் வீட்டிற்கு வந்த தாய், வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருமால் மனைவி சரோஜா (67). இவா் பாவூா்சத்திரம் அருகே அருணாப்பேரியில் உள்ள அவரது மகள் முத்துலட்சுமி வீட்டிற்கு வந்தாா். அங்கு வீட்டின் மாடியில் இருந்து முருங்கை இலை பறித்தபோது தவறி கீழே விழுந்தாராம். இதில், பலத்த காயமடைந்த சரோஜாவை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும், செல்லும் வழியிலேயே சரோஜா இறந்தாா்.
இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.