வெள்ளப்பெருக்கு குறைந்தது: குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் பேரருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் மூன்று நாள்களுக்குப் பின் திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
குற்றாலம் பேரருவியில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
குற்றாலம் பேரருவியில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

குற்றாலம் பேரருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் மூன்று நாள்களுக்குப் பின் திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாகப் பெய்துவந்த தொடா் மழையின் காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், பேரருவி, பழைய குற்றாலம் அருவியில் திங்கள்கிழமை தண்ணீா்வரத்து சற்று குறைந்தது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com