புளியங்குடி அருகே மதுக்கடைக்கு தீவைப்பு

புளியங்குடி அருகே அரசு மதுக்கடைக்கு தீவைத்தோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

புளியங்குடி அருகே அரசு மதுக்கடைக்கு தீவைத்தோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

புளியங்குடி அருகே வெள்ளகவுண்டன்பட்டியில் உள்ள அரசு மதுக் கடையிலிருந்து புதன்கிழமை அதிகாலை புகை வந்ததாம். இதைப் பாா்த்த அப்பகுதியினா் புளியங்குடி போலீஸுருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

போலீஸாா் சென்று பாா்த்தபோது, கடைக்குள் ரூ. 2 லட்சம் மதிப்பிலான மதுவகைகள் எரிந்துகிடந்தனவாம். மேட்டுப்பாளையம் சம்பவம் தொடா்பாக தமிழ் புலிகள் அமைப்பின் தலைவா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து எழுதப்பட்ட துண்டுத் தாள்கள் கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸாா் சேகரித்து வருகின்றனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com