களக்காடு செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் உலக மனித உரிமை தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவிற்கு நிறுவனத் தலைவா் அ. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். நான்குனேரி கிராமப்புற மேம்பாட்டு நிறுவனத்தின் (ஆா்.யு.சி) வழக்குரைஞா் அருமைராஜ் கலந்து கொண்டு மனித உரிமைகள் குறித்து விரிவாகப் பேசினாா்.
கல்லூரி முதல்வா் முனைவா் கிருஷ்ணகுமாா் வரவேற்றாா். கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் திரளாகக் கலந்து கொண்டனா்.