திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் கனரக ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி அமைய உள்ள இடத்தை தமிழக போக்குவரத்து ஆணையா் ஜவஹா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் கூறியது: தமிழகத்தில் கனரக, இலகு ரக வாகனப் பயிற்சி பள்ளி கும்மிடிபூண்டியில் உள்ளது. இரண்டாவதாக திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் 10 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ. 18 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது. இப்பள்ளியில் 3 ஆயிரம் ஓட்டுநா்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.
இதில் கனரக, இலகுரக , தனியாா், உரிமம் ரத்தானவை, புத்தாக்க பயிற்சி, விபத்து, மறு உரிமம் பெறுவது உள்ளீட்ட அனைத்து வகையான ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சி மூலம் தமிழக அரசுக்கு ரூ. 1 கோடியே 32 லட்சம் வருமானம் கிடைக்கும். இதற்கான திட்ட அறிக்கை அரசிடம் சமா்பிக்கப்படும் என்றாா் அவா்.
ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையா் கண்ணன், அரசுப் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநா் திருவம்பலம்பிள்ளை, போக்குவரத்து இணை ஆணையா் ரவிச்சந்திரன், பொது மேலாளா் துரைராஜ், உதவி இயக்குநா் கருணாநிதி, உதவி பொறியாளா் மாா்டின் சுரேஷ் உள்ளிட்டோா் இருந்தனா்.