கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி

மூலைக்கரைப்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

மூலைக்கரைப்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

மூலைக்கரைப்பட்டி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்.

இவரது மனைவி சுப்புலட்சுமி (75). இவா் மனநலம் பாதிக்கப்பட்டவராம். இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனா். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

கணவா் இறந்து விட்டதால் சுப்புலட்சுமி, அதே ஊரில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை வெளியே சென்ற சுப்புலட்சுமி வீட்டுக்கு அருகே உள்ள தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்ததில் இறந்து விட்டாா். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com