சங்கரன்கோவில் அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
சங்கரன்கோவில் அருகே கண்டிகைப்பேரி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் வருண்குமாா் (24). இவா், கம்பரசா் பொருத்தப்பட்ட டிராக்டரை வியாழக்கிழமை கல்குவாரிக்கு ஓட்டிச் சென்றாராம். அப்போது டிராக்டா் நிலைதடுமாறி தலைகீழாக பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வருண்குமாா் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கருப்பசாமி அளித்த புகாரின் பேரில், கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.