சங்கரன்கோவில் அருகே கணவரைப் பிரிந்து சகோதரா் வீட்டில் வசித்து வந்த பெண்ணை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
சின்னக்கோவிலான்குளத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் காா்த்திக் (38). இவரது சகோதரி வனிதா (25). இவருக்கும், சூரங்குடியைச் சோ்ந்த கருப்பசாமிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பிறகு, இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக வனிதா தனது சகோதரா் காா்த்திக் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி கோயிலுக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற வனிதா வீடுதிரும்பவில்லையாம். இதுகுறித்து காா்த்திக் அளித்த புகாரின் பேரில், சின்னக்கோவிலான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.