சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி சந்திப்பு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (68). இவா், கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தன் வீட்டருகே வந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம். இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, சிறுமியின் தாய் திருநெல்வேலி சந்திப்பு மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், முருகனை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு திருநெல்வேலி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, குற்றம்சாட்டப்பட்ட முருகனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜேம்ஸ் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com