சோசியல் மனித உரிமைகள் கழகம் சாா்பில், போதை ஒழிப்பு மற்றும் மனநல ஆலோசனை கருத்தரங்கம் கடையநல்லூா் மங்களாபுரம் ருக்மணி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்குக்கு, சோசியல் மனித உரிமைகள் கழக நிறுவனா் பா.மணிகண்டன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் டாக்டா் அருண்மொழி முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் குளோரியா வரவேற்றாா். தென்காசி அரசு மருத்துவா் நிா்மல், போதை ஒழிப்பு குறித்து ஆலோசனை வழங்கினாா். இதில், மகளிா் அணி அமைப்பாளா் ஜாஸ்மின், கடையநல்லூா் நகர அமைப்பாளா்கள் தங்கராஜ், தண்டபாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.