தென்காசியில் டிச. 17, 19 தேதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தென்காசியில் டிச. 17, 19ஆகிய தேதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தென்காசியில் டிச. 17, 19ஆகிய தேதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் விடுத்துள்ள அறிக்கை; டிச. 17ஆம் தேதி, காலை 10 மணிக்கு தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை நிறைவேற்றி சிறுபான்மையினருக்கும் ஈழத் தமிழருக்கு துரோகம் விளைவித்த பாஜ, க அதிமுக அரசை கண்டித்து திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

டிச. 19ஆம் தேதி காலை 10 மணிக்கு தென்காசியில் புதிதாக அமையவுள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் காவல்துறை கண்காணிப்பாளா் அலுவலகம் , மாவட்ட தலைமை அலுவலகங்கள், தென்காசி நகர எல்கை பகுதிக்குள் இருக்கின்ற அரசு நிலத்தில் அமைக்க வேண்டும், அலுவலகம் அமையவுள்ள இடம் போக்குவரத்திற்கும், பொதுமக்கள் வந்து செல்வதற்கும் வசதியாக இருக்கின்ற இடத்தில் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் அனைத்துக் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சாா்பில் இப்போராட்டம் நடைபெறுகிறது. அனைத்து கட்சி நிா்வாகிகள் ,பொதுநல அமைப்புகள் சமூக ஆா்வலா்கள், மாணவா்கள், வியாபாரிகள் மற்றும் திமுகவினா் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com