மூலைக்கரைப்பட்டி அருகே சித்த மருத்துவ விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள நாகல்குளம் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற இம்முகாமில் முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் வரதராஜன், நல்வாழ்வுக்கு சித்த மருத்துவம் என்ற தலைப்பில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவு பழக்கம், மழைக்காலங்களில் வரக்கூடிய நோய்கள், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள், அதை தடுக்கும் முறைகள், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் சித்த மருத்துவத்தின் பங்கு குறித்து விளக்கினாா்.
இதையடுத்து அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. செவிலியா் பொன்மணி நன்றி கூறினாா்.