திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை (பிப். 14) பெண்களுக்கான கைவினைப் பயிற்சி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கைவினைப் பயிற்சி நடைபெறுகிறது. சி.டி. வைத்து விளக்கு த
யாரித்தல், தெர்மகோல் இலைக் குருவி சுவர் மாட்டி, கார்ட்போர்டு சுவர் மாட்டி, சாய்பாபா மாலை ஆகிய கைவினைப் பொருள்கள் தயாரிப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்த விவரங்களுக்கு 0462-2561915 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.