சிவகிரியில் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

சிவகிரியில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

சிவகிரியில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
வழக்குரைஞர்களுக்கான சேமநல நிதியை உயர்த்தி வழங்கவேண்டும்; இளம் வழக்குரைஞர்களுக்கு மாதம் ரூ. 10,000 ஊக்கத்தொகை வழங்கவேண்டும்; ஹரியானாவில் வீட்டு வசதி வாரியம் மூலம் வழக்குரைஞர்களுக்கு குறைந்த விலையில் நிலம் வழங்குவதுபோல், அனைத்து மாநில வழக்குரைஞர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. 
வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் சங்கை கணேசன், செயலர் சரவணன், பொருளாளர் மணிகண்டன் தலைமையில் சுமார் 60 வழக்குரைஞர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால், நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com