தாழையூத்தில் விபத்து: மாணவர் சாவு

திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்தில் புதன்கிழமை நேரிட்ட விபத்தில் பள்ளி மாணவர் இறந்தார்.

திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்தில் புதன்கிழமை நேரிட்ட விபத்தில் பள்ளி மாணவர் இறந்தார்.
தாழையூத்து காமராஜர் நகரைச் சேர்ந்த முத்துராமன் மகன் முத்துசெல்வன் (12). இவர், சங்கர்நகரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். புதன்கிழமை காலையில் சைக்கிளில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். தாழையூத்து நான்குவழிச் சாலை பகுதியில் 4 முனை சந்திப்பில் சைக்கிள் மீது மினிவேன் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த முத்துசெல்வனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து 
வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com