திருக்குறள் பேரவையின் 42 ஆவது ஒப்பாய்வுப் பொழிவுக் கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அமைப்பின் தலைவர் அ.ராசகிளி தலைமை வகித்தார். பேராசிரியர் பா.வளன்அரசு முன்னிலை வகித்தார். பாஷ்யம் இறைவணக்கம் பாடினார். சுந்தரம் வரவேற்றார். "வள்ளுவரும் கன்பூசியசும்' என்ற தலைப்பில் சேரன்மகாதேவி பாலகிருஷ்ணன் சொற்பொழிவாற்றினார். கனியரசு, பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தி, ராமவெங்கடாசலம், கிருபாகரன், வை.ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.இரா.முருகன் நன்றி கூறினார்.