வள்ளியூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்புத் தனித்தேர்வர்களுக்கான செய்முறைத் தேர்வு செவ்வாய்க்கிழமை (பிப். 26) வள்ளியூரில் நடைபெற உள்ளது.
வள்ளியூர் கண்கார்டியா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற இருப்பதால், இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் பங்கேற்று, சிறப்பாக தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.