பாளையங்கோட்டை அருகே அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பாளையங்கோட்டையை அடுத்த மணப்படைவீடை சேர்ந்தவர் சுருளிராஜன். அரசு ஒப்பந்ததாரர். இவர், வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். சனிக்கிழமை அதிகாலையில் அவருடைய வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சப்தம் கேட்டு சுருளிராஜன் வீட்டுக்கு வெளியே வந்தார். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பியோடினர்.
இதுகுறித்து சுருளிராஜன் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.