கம்பன் இலக்கிய சங்கத்தின் 1,166-ஆவது தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் உள்ள மாநில தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் கு.சடகோபன் தலைமை வகித்தார். பேராசிரியர் பா.வளன் அரசு முன்னிலை வகித்தார். மருத்துவர் மகாலிங்கம் இறை வாழ்த்துப் பாடினார். இணைச் செயலர் இரா.முருகன் வரவேற்றார்.
பொறியாளர் வி.பாப்பையா மனிதநேயம் என்ற தலைப்பில் பேசினார். ஐயமும் விளக்கமும் என்ற தலைப்பில் கு.சடகோபன் பேசினார். வரலாற்று ஆசிரியர் செ.திவான், பிரபா கிருட்டிணன், சித்தாந்த தென்றல் தி.ராமன் ஆகியோர் பாடலுக்கு விளக்கம் அளித்தனர்.
கூட்டத்தில் வை.ராமசாமி, நிலா இலக்கிய வட்ட அமைப்பாளர் ந.ராசகோபால், வைகுண்டராமன், நாகராசன், முருகேசன், சண்முகையா, உமையொரு பாகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பொருளாளர் மு.அ.நசீர் நன்றி கூறினார்.