சைவத்திருமுறை நேர்முகப் பயிற்சி வகுப்பின் நிறைவு விழா பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில் பாளைங்கோட்டை சைவ சபையில் வைத்து சைவத் திருமுறை நேர்முகப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. 5 ஆவது தொகுப்பின் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.
சைவ சபையின் அமைச்சர் வெ.கிருஷ்ணன் தலைமை வகித்தார். ராம்குமார் வரவேற்றார். பேராசிரியை உ.விஜயலட்சுமிக்கும், தேவார இன்னிசை ஆசிரியர் சோ.சொக்கலிங்கத்திற்கும் மாணவர்கள் குருவணக்கம் செய்தனர்.
தேர்வில் சிறப்பிடம் பெற்ற ச.செல்வம், சு.பசுங்கிளி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் கந்தகுமார், கேசவன், செல்வம் ஆகியோர் பயிற்சியின் சிறப்புகள் குறித்து பேசினர்.
துணை அமைப்பாளர் ச.அ.கண்ணன், ப.கார்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். 6 ஆவது தொகுப்பு மார்ச் 19 ஆம் தேதி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.