பாளையங்கோட்டையில் விவேகானந்தர் யோகா மற்றும் சத்சங்க மையம் சார்பில் விவேகானந்தரின் 157-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு விவேகானந்த கேந்திரத்தின் திருநெல்வேலி கிளை பொறுப்பாளர் முத்துசாமி தலைமை வகித்தார். ஜெயகோமா சுந்தரம் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். முருகேசன் இறைவணக்கம் பாடினார். காத்தப்பன், கவிஞர் முருகன் ஆகியோர் விவேகானந்த கேந்திர பாடல்களைப் பாடினர்.
பாளையங்கோட்டை விவேகானந்தர் மன்றத்தின் செயலர் சுந்தரம் பேசினார்.
பள்ளிக் குழந்தைகளின் பாடப் புத்தகங்களில் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு பாடமாக சேர்க்கப்பட வேண்டுமென்றும் , அதற்கான முயற்சிகளை எடுக்க தமிழக அரசை கேட்டுக்கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சந்திரபாபு, வெள்ளத்துரை, பாக்கியம், லட்சுமையா, குரு.கிருஷ்ணமூர்த்தி, திருமலையப்பன், ராமகிருஷ்ணன், மயிலை.சுந்தரி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.