ஆழ்வார்குறிச்சி குட்ஷெப்பர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், தேசிய மருத்துவர் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையடுத்து, பள்ளி மாணவர்கள், மாணவிகள் கடையம் அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர் அன்வர் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கும் மலர்ச் செண்டும், வாழ்த்து அட்டையும் அளித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.