சைவ வேளாளர் சங்கக் கூட்டம்

பாளையங்கோட்டை கேடிசி நகர், விஎம் சத்திரம் சைவ வேளாளர் சங்க கூட்டம் கேடிசி நகரில் நடைபெற்றது. 

பாளையங்கோட்டை கேடிசி நகர், விஎம் சத்திரம் சைவ வேளாளர் சங்க கூட்டம் கேடிசி நகரில் நடைபெற்றது. 
சங்கத் தலைவர் அய்யம்பெருமாள் தலைமை வகித்தார். ரா.முருகன், நாகராஜன், சொக்கலிங்கம், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் மா.கந்தக்குமார் வரவேற்றார். கேடிசி நகர் வடபகுதி கீழநத்தம் ஊராட்சி பகுதியில் உள்ள பல தெருக்களில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அதை சீரமைக்க வேண்டும். குடிநீர்க் குழாய்களில் தினசரி குடிநீர் வர ஏற்பாடு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சந்தானம், கிருஷ்ணன், கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com