தெற்குகள்ளிகுளம் ஊராட்சியில் நிலத்தடி நீரை உயர்த்தும் நோக்கத்தில் குட்டையை தூர்வாரும் பணியில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டனர்.
ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் தெற்குகள்ளிகுளம் ஊராட்சி மூலக்காடு கிராமத்தில் நீராதானமான குட்டையை தூர்வாரும் பணியை கிராம மக்களுடன் இணைந்து ராதாபுரம் ஒன்றிய நாம் தமிழர் கட்சியினர் இயந்திரம் மூலம் மேற்கொண்டனர். இதில், குட்டைப்பகுதியில் உள்ள காட்டு செடிகள் மற்றும் உடைமரங்களை அப்புறப்படுத்தினர்.
இப்பணியை நாம் தமிழர் கட்சி ராதாபுரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறைச் செயலர் பிரான்சிஸ், ராதாபுரம் வடக்கு ஒன்றியச் செயலர் கிளிண்டன், ஆறுமுகம், ராதாபுரம் தொகுதிச் செயலர் சதீஷ் பன்னீர், ராதாபுரம் தொகுதி தலைவர் செந்தில் ஆறுமுகம், மூலக்காடு ராபின் ஆகியோர் செய்திருந்தனர்.