திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கோடைகால எம்ப்ராய்டரி பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
கோடை விடுமுறையை மாணவர்கள், பெண்கள் பயனுள்ள வகையில் பயன்படும் நோக்கத்தில் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மே 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மண்பாண்டம், கலைபொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் நடைபெற்றன.
இதனிடையே, மே 27 ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் எம்ப்ராய்டரி பயிற்சி அளிக்கப்பட்டது. இம்முகாம் வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி செய்திருந்தார்.