திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் நேரிட்ட விபத்தில் இளைஞர் இறந்தார்.
சங்கரன்கோவிலில் உள்ள காயிதே மில்லத் 2ஆம் தெருவைச் சேர்ந்த அப்துல் காதர் மகன் தாரிக் (21). இவர் தன் நண்பர் முகமதுவுடன் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் திருவேங்கடம் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது முன்னால் சென்ற லாரியை அவர்கள் முந்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் இருசக்கர வாகனம் லாரியில் சிக்கியதில், தாரிக் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த முகம்மது சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சங்கரன்கோவில் நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.