மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திக்கு உள்பட்ட கல்லூரிகளில் எம்சிஏ மற்றும் முதுநிலை கலை, அறிவியல் பாடங்களில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி சிறப்பு துணைத் தேர்வு நடைபெறுகிறது.
இது தொடர்பாக திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சே.சந்தோஷ் பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட கல்லூரிகளில் 2016-17-ஆம் ஆண்டில்
எம்சிஏ படிப்பில் சேர்ந்து, 2019 ஏப்ரலில் இறுதித் தேர்வெழுதியவர்கள், 2017-18-இல் முதுநிலை கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர்ந்து 2019-இல் இறுதித் தேர்வெழுதியவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இம்மாதம் 28-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு துணைத் தேர்வு நடைபெறவுள்ளது.
கல்லூரிகளில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கல்வி ஆண்டிற்கு முன்னர் பயின்ற தனித்தேர்வர்களுக்கு அனுமதி கிடையாது. முதுநிலை மாணவர்கள் வியாழக்கிழமை (ஜூன் 13) முதல் 18-ஆம் தேதி வரை www.msuniv.ac.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுக்கட்டணம் ரூ.1000. கட்டணத்தை இணையதளம் மூலமே செலுத்த வேண்டும்.
சிறப்புத் தேர்வை எழுதும் மாணவர்கள் அதற்குரிய அனுமதி சீட்டை ஜூன் 24-ஆம் தேதி ஜ்ஜ்ஜ்.ம்ள்ன்ய்ண்ஸ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மாணவர்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்படும். சிறப்பு துணைத் தேர்வு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும்.