அரசு அருங்காட்சியகத்தில் பெண்களுக்கான யோகா பயிலரங்கம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பெண்களுக்கான சிறப்பு யோகா

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பெண்களுக்கான சிறப்பு யோகா பயிலரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
காயகல்ப பயிற்சியை மேற்கொள்வது தொடர்பான யோகா பயிற்சியை அறிவுத் திருக்கோயில் நெல்லை சிட்டி மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் யோகா பயிற்சியாளர்கள் நடத்தினர்.
இப்பயிற்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர். இப்பயிற்சியை தொடர்ந்து செய்வதன்மூலம் நீண்ட ஆயுள், நினைவாற்றல், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை அதிகரிக்கும். இப்பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நடைபெற உள்ள யோகா தின சிறப்பு நிகழ்வில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com