பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் விவேகானந்தர் மன்றக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு மன்ற நிறுவனர் தலைவர் வளன் அரசு தலைமை வகித்தார். பாஷ்யம் இறைவணக்கம் பாடினார். மன்றச் செயலர் சுந்தரம் வரவேற்றார். "மகான் கண்ட குரு' என்ற தலைப்பில் பாப்பாக்குடி அ.முருகன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில், மருத்துவர் ஐயப்பன் மகாலிங்கம், முத்தையபிள்ளை, சா.முத்துசாமி ஆகியோர் கருத்துகளை பதிவு செய்தனர். கூட்டத்தில், வை.ராமசாமி, வெள்ளத்துரை, ராமகிருஷ்ணன், குமார், சுப்பிரமணியம், மாரிராஜா, ஜெயக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். முருகன் நன்றி கூறினார்.