ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்திலிங்க சுவாமி அன்னை யோகாம்பிகை கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா தொடக்கமாக வியாழக்கிழமை காலை கொடியேற்றமும், தொடர்ந்து சுவாமி அம்பாள் ரிஷப வாகனம், அப்பர் சுவாமி வீதியுலா, இரவு விநாயகர் மூசிக வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் வீதியுலா, இரவு 9 மணிக்கு ஏக சிம்மாசனத்தில் சுவாமி அம்பாள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை சுவாமி அம்பாள் ஏக சிம்மாசனம், விநாயகர் மூசிக வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் வீதியுலா நடைபெற்றது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு சுவாமி பூங்கோயில், அம்பாள் சிங்க வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.
தொடர்ந்து விழா நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 10ஆம் திருநாளான மார்ச் 23ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் கட்டளைதாரர் டாக்டர் ரமேஷ், நல்லூர் ஊராட்சி முன்னாள் தலைவர் ஞானசுந்தரி சாமுவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா செளந்திரராஜன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்