திசையன்விளை ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.
இக்கோயில் கொடைவிழாவை முன்னிட்டு, கோலப் போட்டி, ஆசிரியர் ஆர்.சந்திரசேகர் பங்கேற்ற ஆன்மிகச் சொற்பொழிவு, புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை, அற்புத விநாயகர் ஆலயத்திலிருந்து பால்குடம் மற்றும் திருமஞ்சன பவனி, அம்மனுக்கு 27 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறுவர், சிறுமிகள் கலந்துகொண்ட கலை நிகழ்ச்சிகள், இரவு 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அன்ன படப்பு பூஜை ஆகியவை நடைபெற்றன. விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சி தென்மண்டலத் தலைவர் ஆர்.பி.எஸ்.கார்த்தீசன் கலந்துகொண்டார்.