"மாநகராட்சி வரி வசூல் மையங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும்'

திருநெல்வேலி மாநகராட்சி வரி வசூல் மையங்கள் இம் மாதம் 31 ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி வரி வசூல் மையங்கள் இம் மாதம் 31 ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் பி.விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2018-19 ஆம் நிதியாண்டு முடிவடைய சில நாள்களே உள்ள நிலையில் பொதுமக்கள் மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, காலிமனை வரி,  குடிநீர்க் கட்டணம், தொழில் வரி, மாநகராட்சி கடை வாடகை,  பாதாள சாக்கடை திட்ட சேவைக் கட்டணம் ஆகியவற்றை செலுத்த ஏதுவாக இம் மாதம் 31 ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநகராட்சியின் அனைத்து கணினி வரி வசூல் மையங்களும் இயங்கும்.  பொதுமக்கள் காலம் தாழ்த்தாமல் வரியினங்களை செலுத்த வேண்டுமென அந்தச் செய்திக் குறிப்பில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com