தென்காசி சீவநல்லூர் அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வி வளர்ச்சித் திருவிழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சித் தலைவர் ப. சட்டநாதன் தலைமை வகித்து, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். செங்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலர் டே.சா. மேரிகிரேஸ்ஜெயராணி முன்னிலை வகித்தார். பாத்திமாநஸ்ரின் ஆண்டறிக்கை வாசித்தார்.
பெ. அருணாசலம், இசக்கியாபிள்ளை, மூக்காண்டி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியர் ம. ஆக்னஸ்மேரி வரவேற்றார். ந. தங்கம் நன்றி கூறினார்.