நான்குனேரி அருகே மாணவி சனிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
நான்குனேரி அருகே ஸ்ரீரெங்கராஜபுரத்தைச் சேர்ந்த முருகேஸ் மகள் இசக்கியம்மாள்(17). மூலைக்கரைப்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், அனைத்து பாடங்களில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று படித்து வந்தாராம். தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதி வந்தார்.
இந்நிலையில் இசக்கியம்மாள் மேல்படிப்பு படிக்க ஆசைப்பட்டாராம். அதற்கு பெற்றோர் அனுமதிக்காமல், திருமணம் செய்துவைக்க பேச்சுவார்த்தை நடத்தினராம். இதில் மனமுடைந்த அவர் சனிக்கிழமை மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தாராம். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நான்குனேரி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.