செங்கோட்டையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும், இவ்வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் மீது

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும், இவ்வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் மீது சென்னை உயர்நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் செங்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஆ.வெங்கடேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் முத்துக்குமாரசாமி, செயலர் அருண், இணைச் செயலர் கார்த்திகை ராஜன், பொருளாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில், வழக்குரைஞர்கள்  ஆதிபாலசுப்பிரமணியன், மாரிக்குட்டி, சக்திவேல், சின்னராஜ், பழனிக்குமார், தங்கராஜ், திருநாவுக்கரசு, சாமி, சிதம்பரம், கோபிநாத், நல்லையா, ராஜாராம், குமார், சுடலைக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com