திருநெல்வேலி அருகே பொன்னாக்குடியில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர்- உண்ணாமுலை அம்பாள் கோயிலில் காலபைரவர் ஜெயந்தி விழா மே 5 ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 9 மணிக்கு கஜபூஜை, 10 மணிக்கு கணபதி ஹோமம், பைரவர் வேள்வி, முற்பகல் 11 மணிக்கு பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் க.ஜெகநாதன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.