மேலக்கடையநல்லூர் அருள்மிகு கடகாலீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன .
இக்கோயிலில் மாதந்தோறும் கார்த்திகையையொட்டிசிறப்புப் பூஜைகள் நடைபெறும். அதன்படி, கோயிலில் முருகனுக்கு மாலையில் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமி பல்லக்கில் எழுந்தருளும் வைபவமும், ரத வீதி உலாவும் நடைபெற்றன. ஏற்பாடுகளை கிருஷ்ணமூர்த்தி பட்டர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.