நெல்லை சங்கீத சபாவில் வெள்ளிக்கிழமை முதல் 9 நாள்கள் (மே 10-18) தியாகராஜர் ராமாயணம் சிறப்பு உபன்யாசம் நடைபெறும்.
உலக அமைதிக்காகவும், எல்லோருக்கும் எல்லாவிதமான நன்மைகள் ஏற்படவும் வேண்டி, நெல்லை சங்கீத சபா, காட் சத் சங்கம் ஆகியவை இணைந்து இந்தச் சிறப்பு உபன்யாசத்தை நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு பாலாஜி பாகவதர் பங்கேற்று சிறப்பு உபன்யாசம் செய்கிறார். தினமும் மாலை 6.30 முதல் இரவு 8.30 மணி வரை உபன்யாசம் நடைபெறும். இதில் ஆன்மிகத்தோடு கலந்த இசை நிகழ்ச்சியும் இடம்பெறும். அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.