ஸ்ரீதக்ஷின் ஷீரடி சாய் கோயிலில் நாளை வருஷாபிஷேகம்

திருநெல்வேலியை அடுத்த சிவந்திப்பட்டி சாலையில் உள்ள ஸ்ரீ தக்ஷின் ஷீரடி சாய் கோயிலில் முதலாவது

திருநெல்வேலியை அடுத்த சிவந்திப்பட்டி சாலையில் உள்ள ஸ்ரீ தக்ஷின் ஷீரடி சாய் கோயிலில் முதலாவது ஆண்டு வருஷாபிகேஷம் வரும் வெள்ளிக்கிழமை(மே 17) நடைபெறுகிறது. 
 ஸ்ரீதக்ஷின் ஷீரடி சாய்நாதர் அருள்மிகு செல்வகணபதி, அருள்மிகு தாத்தாத்ரேயர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு முதலாவது வருஷாபிஷேக விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம், 8.30 மணிக்கு 1,008 சங்கு பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுதர்ஷன ஹோமம், லட்சுமி ஹோமம், விஷ்ணு சகஸ்ரநாமஹோமம், சாயி மூலமந்த்ர ஹோமம் ஆகியன நடைபெறுகிறது. முற்பகல் 11 மணிக்கு கோ பூஜை, சுபாஷினி பூஜை, கன்னிகா பூஜை, தம்பதி பூஜை, யாத்திரா தானம், கடம் புறப்பாடு, விமான அபிஷேகம், மூர்த்தி அபிஷேகம், 1,008 சங்காபிஷேகம், சிறப்பு அலங்காரம், பகல் 12 மணிக்கு மதிய ஆரத்தி, வேதபாராயணம், புஷ்பாஞ்சலி, சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை,  6 மணிக்கு மாலை ஆரத்தி, 6.30 மணிக்கு பஜனை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com