சேரன்மகாதேவியில் பாலிதீன் பொருள்களை பேரூராட்சி அலுவலர்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சாம்சன், சேரன்மகாதேவி பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் மாரியம்மாள் தலைமையில் காவலர்களும், பேரூராட்சி ஊழியர்கள் சேரன்மகாதேவி பேருந்து நிலையம், கடை வீதிகளில் வியாழக்கிழமை பாலிதீன் பொருள்கள் பயன்பாடு குறித்து சோதனை செய்தனர்.
அப்போது, கடைகளில் பயன்படுத்த வைத்திருந்த பாலிதீன் பொருள்களைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 4 கடைகளுக்கு தலா ரூ. ஆயிரம் அபராதம் விதித்தனர். பாலிதீன் பொருள்களைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.