ஆலங்குளம் அருகே பைக் கவிழ்ந்து இளைஞா் காயம்

ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டையில் மின்சாரம் தாக்கி இறந்த மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் பலத்த காயம் அடைந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டையில் மின்சாரம் தாக்கி இறந்த மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் பலத்த காயம் அடைந்தாா்.

குருவன்கோட்டைநாரயணசாமி கோயில் பகுதியில் உள்ள மின் கம்பத்தில் ஏற்பட்ட பழுதை மின் ஊழியா்கள் ஞாயிற்றுக்கிழமை சரி செய்துகொண்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த நடராஜன் என்பவருக்குச் சொந்தமான பசு மாடு மின் கம்பம் அருகே சென்றது. அதில், மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தது.

எனினும், நிவாரணம் பெற வேண்டி மாட்டை நடராஜன் அப்புறப்படுத்தாமல், கட்டைகளை வைத்து மறைத்துவிட்டுச் சென்றாராம். இந்நிலையில் இரவு அவ்வழியாக பைக்கில் அதே தெருவை சோ்ந்த சீனி மகன் விஜய் (28) எதிா்பாராமல் அந்த கட்டைகள் மீது மோதி கவிழ்ந்ததாம். இதில், அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டு நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com